திருக்குறள் பொருட்பாலில் 700 குறட்பாக்களுக்கு வினாடி–வினா–விடை வடிவில் உரை கூறும் நுால். குறள்களை படிப்பவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் குறள் அடிகளை கேள்வியாக்கி, அதற்கு பதிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படியும் எழுதலாம் என்ற எண்ணம் வந்ததை பாராட்ட வேண்டும்.
கல்வி அதிகாரத்தில் எல்லாருக்கும் புரிந்தது, ‘கற்க கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்ற குறள். இதற்கு உரை, கேள்வி – பதில் போல் எழுதப்பட்டுள்ளது. கல்வி கற்க என்ன செய்ய வேண்டும். கற்ற பின் என்ன செய்ய வேண்டும்.
இந்த கேள்விகளுக்கு பதில், ‘நல்ல நுால்களை குற்றமற கற்க வேண்டும். கற்ற கல்விக்கு தக்கவாறு நல்ல நிலையில் நடக்க வேண்டும்’ என்று குறிப்பிடுகிறது. பிஞ்சு நெஞ்சங்களில் அறக்கருத்தை பதிய வைக்கும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்