அறத்தை வலியுறுத்தும் திருக்குறள் உரையை மூன்று மொழிகளில் பதிப்பித்துள்ள நுால். தமிழ் மூலத்துடன் ஹிந்தி, ஆங்கில மொழி உரைகளும் இடம் பெற்று உள்ளன. குறள் பாக்களுடன் எளிய நடையில் தமிழ் உரை தரப்பட்டுள்ளது. தொடர்ந்து, எம்.ஜி.வெங்கடகிருஷ்ணன் எழுதிய ஹிந்தி உரை உள்ளது. ஆங்கிலத்திலும் சுருக்கமாக உரை தரப்பட்டுள்ளது. மூன்று மொழிகளில் அறத்தை உரைக்கிறது.
பள்ளி, கல்லுாரி மற்றும் பிற மொழி ஆய்வு மாணவர்களுக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள நுால். – ஒளி