அண்ணாதுரையின் அரசியல் பயண நிகழ்வுகளிலிருந்து தொகுக்கப்பட்ட நுால். பார்லிமென்டில் உரையாற்றியதை, அப்போதைய பிரதமர் நேரு மெய்மறந்து கேட்டது பற்றிய தகவலை சொல்கிறது.
நல்லதம்பி படத்திற்கு கதை, வசனம் எழுதியமைக்கு ஊதியம் கொடுக்க இயலாமைக்காக கலைவாணர் வருந்தியது, ஜி.டி.நாயுடுவுடன் உரையாடிய நிகழ்வு, சீர்திருத்த திருமணங்களை சட்டம் ஆக்கியது, தியாகி சங்கரலிங்கனார் கனவை நனவாக்கியது, ராஜாஜியுடன் கூட்டணி வைத்த போது ஹிந்தியை எதிர்த்த நிகழ்வு போன்றவை பதிவாகியுள்ளன.
–
புலவர் சு.மதியழகன்