அறிவே சிறந்த ஆயுதம் என விளக்கும் நுால். ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள், பல்லாயிரம் வேதம் அறிவொன்றே என்று பாரதி பாடலை தேவையான இடத்தில் பயன்படுத்தியிருப்பதுடன் பாடல் வரிகளை அங்கங்கே உலவ விட்டிருக்கிறார்.
உரையாடுவது அறிவு என்றால், சுருங்கச்சொல்லி விளங்க வைப்பது பேரறிவு என்று வேறுபடுத்திக் காட்டியுள்ளார். சூழ்ச்சி செய்தல், சதி செய்தலை பாமரனை விடவும் அறிவாளியே அதிகமாகச் செய்கிறான். அப்படி என்றால் அறிவு என்பது உயர்வுக்கானது இல்லையா என்ற வினாவுக்கு விடை தருகிறது. அறிவு பெறுவதற்கு அவசியம் படிக்கவேண்டிய நுால்.
–
முகிலை ராசபாண்டியன்