சமூக - பொருளாதார உரிமைக்கான மையம், 1-பி, பாண்டு கிளிக்ஸ் பிளாசா, 330/168, தம்புசெட்டி தெரு, சென்னை-600
கிரெடிட்கார்டு கலாசாரம் அதிவேகமாகப் பரவி வருகிறது. நேர்மையானவர்கள் கூட கிரெடிட் கார்டு மோசடியில் சிக்கித் தவிப்பது கண்கூடு. கிரெடிட் கார்டு கணக்கு வழக்குகள், "அவுட்சோர்சிங்' முறையில் கையாளப்படுவதால், ஒவ்வொரு பணப்பரிவர்த்தனையின் போதும் அதிக கவனம் தேவை என்று எச்சரிக்கிறார். அது மட்டும் அல்ல. தாமதமாகச் செலுத்தப்படும் பணத்திற்கு வங்கிகள் சில வசூலிக்கும் வட்டி ஈட்டிக்கார வட்டியை விட அதிகம். இவை பக்கம் 21, 22ல் காணலாம். இந்த கார்டு குறித்த தகவல்கள் ஆங்கிலத்திலும் தரப்பட்டிருப்பது சிறப்பு. மேலும் கார்டு தொலைந்தால் அடுத்து என்ன செய்வது என்ற தகவலும் சிறப்பாகத் தரப்பட்டிருக்கிறது. வளர்ந்து வரும் காலத்தில் பிரச்னைகளை சுலபமாகச் சந்திக்க வழிவகை காட்டும் நூல். அதுவும் தமிழில் எழுதப்பட்ட முதல் முயற்சிக்கு பாராட்டுதல்கள்