திராவிட இயக்க வரலாற்றை எடுத்துச் சொல்லும் தொகுப்பு நுால். தமிழ், பேச்சு மொழி என்ற நிலையைக் கடந்து அரசியலில் நிலை பெற்றது சொல்லப்பட்டுள்ளது. ஜாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு பிரசார கட்டுரைகளம் உள்ளன.
தமிழகத்தில் கல்வி வளர்ச்சியை முதன்மைப் படுத்தும் கட்டுரைகள் உள்ளன. அதில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய தலைவர்கள் குறித்தும் கூறப்பட்டுள்ளது. திராவிட இயக்கத்தில் இளைஞராய் இணைந்து முதியோராய் முழங்கிய தலைவர்களின் அதிரடிப் பேச்சுகளையும், எழுத்துகளையும் தொகுத்து தரும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்