முகப்பு » கதைகள் » ப்ரேம்சந்த் கதைகள்

ப்ரேம்சந்த் கதைகள்

விலைரூ.190

ஆசிரியர் : லதா ராமகிருஷ்ணன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை

பக்கம்: 302

பள்ளி ஆசிரியை பணியை விட்டு விட்டு விடுதலைப் போராட்ட வீரராக, தம் இலக்கியங்கள் மூலம் ஏழை எளிய மக்களின் நல்வாழ்வையும், நாட்டுப்பற்றையும் வலுவூட்டிய ப்ரேம் சந்த் எழுதிய இச்சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒரு படிப்பினையைப் பதிவாக்கியுள்ளது.கடனை மிஞ்சிய வட்டியின் கொடுமையை "கையளவு கோதுமையிலும், குடிப்பழக்கம் நாட்டுக்கு நன்மை செய்யாது என்பதை, "சதுரங்க ஆட்டக்காரர்கள் கதையிலும் இப்படி ஒவ்வொன்றும் ஒரு கருவை மையமாகக் கொண்டது.
கலையின் நயங்கள், நளினங்கள் என்று சொல்லப்படுபவையெல்லாம் அவரால் புறந்தள்ளப்பட்ட போதிலும், அவர் சுட்டும் வறுமையும், துயரமும், மிகுந்த வீச்சோடு நம்மைக் கவரக் கூடியவை. இலக்கிய முன்னோடி என்பதால், அவரது நடைக்கும், எழுத்துக்கும் என்றும் பெருமை உண்டு. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இச்சிறுகதைகள் ஆங்கிலம் மூலம் மொழி பெயர்க்கப்பட்டவை.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us