விலைரூ.150
முகப்பு » கட்டுரைகள் » இராமனும் இராமசாமியும்
புத்தகங்கள்
இராமனும் இராமசாமியும்
விலைரூ.150
ஆசிரியர் : ம.பிரகாஷ்
வெளியீடு: காவ்யா பதிப்பகம்
பகுதி: கட்டுரைகள்
Rating
பக்கம்: 192
ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போன்று, எந்த விவாதத்திற்கும் இரண்டு விதமான விளக்கங்கள் உண்டு என்பர். இந்நூலில், ராமரின் அவதாரம் குறித்து, ஈ.வெ.ரா., எடுத்துக் கொண்ட, ராமாயண எதிர்ப்புப் போர் குறித்து, மிக விரிவாக ஆய்வு செய்யப் படுவதை காண்கிறோம்.இந்நூலில் மூன்று பிரிவுகளில் ராமாயணம் குறித்த ஆய்வுகளை நூலாசிரியர் செய்துள்ளார்.
அதில் பெரியாருக்கு முன் ராமாயணமும் தமிழ்ச் சமூகமும் என்ற பிரிவு, நூலாசிரியரின் கடும் உழைப்பையும், ஆய்வுத் திறனையும் தெரிவிக்கின்றது. இரண்டு மற்றும் மூன்றாம் பிரிவுகளை அவரது பேச்சுக்கள் மூலம் விளக்குகிறார். ஈ.வெ.ராவின் பல கொள்கைகளை ஏற்றுக் கொண்ட தமிழ் மக்கள், ராமாயணம் குறித்த அவரது வாதங்களைப் புறக்கணித்து விட்டனர் என்பது தான் உண்மை.
இந்நூல் படித்து முடித்ததும் நமக்கு ஏற்படும் எண்ணங்கள் இரண்டு. ஒன்று செத்த பாம்பை மீண்டும் அடிப்பது வீரமா? இரண்டாவது பழங் குப்பைகளைக் கிளறுவது ஆய்வா? பகுத்தறிவு பண்பாட்டை வளர்க்க வேண்டும், சிதைக்கக் கூடாது என்பதை நடுநிலையாளர்கள் நிச்சயம் ஏற்பர்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய