முகப்பு » கதைகள் » விடுதலை (நாவல்)

விடுதலை (நாவல்)

விலைரூ.200

ஆசிரியர் : பிரேமா நந்தகுமார்

வெளியீடு: சாகித்திய அகாடமி

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இந்தியா, இந்தியா – பாகிஸ்தான் என, இரண்டாகப் பிரிந்தபோது, பல படுகொலைகள் நடந்தன. பஞ்சாபிலும், வங்காளத்திலும் நடப்பதாக மயிர்க் கூச்செறியும் சம்பவங்கள் பற்றி தினசரிகள் வர்ணித்தன. கொலை, நெருப்பிடுதல், கற்பழிப்பு, இது உண்மை தான் என்று காட்ட தினமும் முஸ்லிம் அகதிகள் கிழக்கு வங்காளம் மற்றும் இந்தியாவின் ஏனைய பாகங்களிலிருந்து சியால் கோட்டுக்கு  டிரெயினிலும், பஸ்சிலும் வந்த வண்ணம் இருந்தனர்.  
ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் இந்தியரும்  சீக்கியர்களும் சியால்கோட்டை விட்டு அகன்றனர். உடனடியாக வேறு வழி இல்லாதவர்களே அகதிகள் முகாமுக்கு சென்றனர்.
லாலாகன்ஷிராம் என்பவரது குடும்பம் இந்தியா – பாகிஸ்தான்  பிரிவினையின் போது, எப்படி பாதிக்கப்பட்டது என்பதை மனதை உருக்கும் வகையில் இந்த நாவல் சித்தரிக்கிறது! இந்த நாவல், 1977ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது. பிரேமா நந்தகுமாரன் இனிய, எளிய தமிழில் பாங்குடன் மொழிபெயர்த்திருக்கிறார்.
எஸ்.குரு.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us