ரிச்சர்ட் டாக்கின்ஸ் என்ற ஆங்கிலேய அறிஞர், ‘தி செல்பிஷ் ஜீன்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதியுள்ள நுால், தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மனித வளர்ச்சிக்கு ஜீன் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை பல கோணங்களில் ஆராய்கிறது.
உடலின் வேலை ஜீனைப் பிரதி எடுத்துக் கொடுப்பது. சுற்றுச்சூழலில் இருந்து காப்பாற்றவும் செய்கின்றன. சுயநல ஜீன்கள் துவங்கி, எல்லை மீறும் ஜீன்கள் வரை, 11 பெரும் கட்டுரைகளின் தொகுப்பாக விளங்குகிறது.
ஒருவர் பெருமையைப் பற்றி பேசும்போது, எங்கள் முப்பாட்டன், பாட்டன், தந்தை, எல்லாரும் சங்கீத வித்வான்கள் என்று ஜீன்கள் தான் சொல்ல வைக்கின்றன என்கிறது. தர்மத்தோடு நடப்பவர்கள், அதர்மம் செய்து வாழ்பவர்கள், சமயத்துக்கு ஏற்றபடி வாழ்பவன் என்று, ‘கேம்ஸ் தியரி’ என்ற விளையாட்டால் விளக்குகிறது. அறிவியல் அறிஞர்களுக்கு பயன்படும் நுால்.
–
பேராசிரியர் இரா.நாராயணன்