முகப்பு » கதைகள் » மருமகள்... நான்

மருமகள்... நான் மகளானேன்!

விலைரூ.110

ஆசிரியர் : கவிஞர் க.சிவசண்முகம்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கவிதையுடன் உள்ள சிறுகதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். ஒவ்வொன்றும் இரண்டு, மூன்று பக்க அளவில் அமைந்திருக்கிறது.

தலைப்பை சொல்லும் ஒரு கதை. மாமியார் தான் சம்பந்தி. அம்மாவிடம் காட்டிய நாகரிக பண்பு, மருமகளாய் போனவரை மகளாக மாற்றுகிறது. நல்ல குணம் எங்கிருந்தாலும் வாழத்தானே செய்யும்.

முழுக்க முழுக்க நகைச்சுவையாக உள்ளது, ‘நீலா ராமுவின் நிலா’ என்ற கதை. ஆபீசுக்கு வரப்போகும் புது மேனேஜர் சக ஊழியர்களை எடை போடுவது நல்ல மாதிரியாக தரப்பட்டுள்ளது. கதைகளுக்கு இடையில் வர்ணனைகள் அலாதியாக உள்ளன.

எந்த ‘டிவி’ சேனலில் எத்தனை மணிக்கு, என்ன நாடகம், எப்போது விளம்பர இடைவெளி வரும் என மனதிலே பதிய வைத்து விடும் கதையும் உள்ளது.

சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us