முகப்பு » ஆன்மிகம் » நவ பிருந்தாவனம்

நவ பிருந்தாவனம்

விலைரூ.80

ஆசிரியர் : அம்மன் சத்தியநாதன்

வெளியீடு: அருள்மிகு அம்மன் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
அருள்மிகு அம்மன் பதிப்பகம், 16/116, டி.பி., கோவில் தெரு, திருமலா பிளாட்ஸ், திருவல்லிக்கேணி, சென்னை-5. போன்: 4266 3545.(பக்கம்: 264)

பிரஹல்லாதர் தவமிருந்த இடம் நவபிருந்தாவனம். இந்த புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் ஒன்பது மகான்களும் தெய்வ அவதாரங்கள். மொத்தம் 264 பக்கங்களில் சொல்லியிருக்கும் செய்திகள் ஏராளம். நவபிருந்தாவனத்திற்கு செல்வதற்கான குறிப்புகள், கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவைகள், தவிர்க்கப்பட வேண்டியவைகள் மற்றும் செய்ய வேண்டிய பிரார்த்தனைகள் இவை எல்லாவற்றையும் விளக் கிய ஆசிரியருக்கு பாராட்டுக்கள். ஒன்பது கேள்விகள், கிளை கேள்விகள் இவற்றுக்கு விடை சொல்லப்பட்டிருக்கிறது. ஒரே இடத்தில் பிருந்தாவனம் ஆனதற்கு காரணம், எடுத்ததை முடித்து தரும் ஹனுமான், கிஷ்கிந்தை ஹம்பியிலே அற்புதம் புரிந்த ஆஞ்சநேயர் சரித்திரங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.
நமது பாபங்களை போக்கி கொள்ள, பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ள கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம் நவபிருந்தாவனம். அதிலும் மாத்வரின் நெறியைப் பின்பற்றுபவர்களுக்கு இந்த நூல் அரிய பொக்கிஷம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us