முகப்பு » தமிழ்மொழி » சித்திர பெரிய புராணம்

சித்திர பெரிய புராணம் - ஓவியம்

விலைரூ.275

ஆசிரியர் : எஸ்.ராஜம்

வெளியீடு: ஸ்ரீராம்கி கிருஷ்ணமடம்

பகுதி: தமிழ்மொழி

Rating

பிடித்தவை

 பக்கம்: 342   

சேக்கிழார் பெருமான் செய்து அருளிய பெரிய புராணம், 63 சிவத்தொண்டர்களின் பெருமையை விவரிக்கிறது. இவர்களை   63 நாயன்மார்களாக்கி, சிவபெருமான் அவர்களோடும், தொண்டர்கள் சிவபெருமானோடும் சேர்ந்து நடத்திய திருவிளையாடல்களை எடுத்துக் கூறும் பெரிய புராணத்தைச் சுருக்கமாக, அதே நேரத்தில், தெளிவாக பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் எளிய தமிழில் எழுதியிருக்கிறார்.

ஓவியர் ராஜத்தின் ஓவியங்கள், வாசகர்களின் யோசனையைத் தூண்டி சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது.பிற்சேர்க்கைக்காக, திருத்தொண்டர் வர்ணம் என்ற தலைப்பின் கீழ், வழங்கப்பட்டுள்ள தகவல்கள் மிகவும் உபயோகமானவை. இந்த நூல் தயாரிக்கும் பொறுப்பை ஏற்று ஆசிரியராகத் திறம்பட பணிமுடித்துள்ள அருட்செல்வர் பாராட்டுக்குரியவர். இது போன்ற ஆன்மிக இலக்கியப் பணியை, தியாக உள்ளத்துடன் செய்துவரும் பொள்ளாச்சி அருட்செல்வரை தமிழ் கூறும் நல்லுலகம்,  வாழ்த்தி வணங்கும். இதுபோன்ற நல்ல நூல்களை வெளியிடும் பணியைச் செய்யும், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்து பதிப்பகத்துறைக்கு ஆக்க பூர்வமான ஆதரவு அளிக்க, தமிழகம் கடமைப்பட்டிருக்கிறது. மிகச்சிறந்த வடிவமைப்புடன் வெளிவந்துள்ள இந்த நூலை வாங்கி, வாசித்து நலமடைவோம்.

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us