முகப்பு » கட்டுரைகள் » புதிய நோக்கில் புறநானூறு

புதிய நோக்கில் புறநானூறு

விலைரூ.100

ஆசிரியர் : பூவை அமுதன்

வெளியீடு: அருள் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
புறநானூறு, பழந்தமிழ்ப் புலவர் பல நூறு பேர், பல்வேறுபட்ட பாடு பொருட்கள் பற்றிப் புனைந்துள்ள தொகுப்பு நூலாகும். ஊர், பேர் தெரியாத புலவர்களின் அருமை பெருமைகளைக் காலா காலத்துக்கும் காட்டவல்ல, கவிமலர்கள் கொண்ட தொகுப்பே புறநானூறு. நூறு தலைமுறைகள், கடந்த நிலையிலும் பழந்தமிழ் நாட்டையும், அக்கால மக்கள் வாழ்க்கை, பண்பாட்டையும் நாடாளும் செல்வர், மன்னர், வீரர் முதலியோர்  மாண்புகளையும், பல்வேறு நிலைகளால் குறித்துக் காட்டும் அரிய பாடல்களின் தரத்தையும் கொண்டது.

உ.வே.சா.,வின் பெருமுயற்சியில் வெளிவந்த பல நூல்களில், புறநானூறு எனும் புதையலும் ஒன்று. பல துறை நூல்களைப் படைத்தளித்து, நாட்டில் நன்கு அறிமுகமானவர் ஆசிரியர் பூவை அமுதன். வாழ்த்துகள் எனத் துவங்கி, சிறப்புக்குரிய சேதிகள் என்பது வரை முடித்துள்ள கட்டுரைகள், பதினெட்டு அடங்கிய புத்தகமாகத் தந்துள்ளார்.

ஆய்ந்து தெளிந்து அனுபவப்பட்ட தேர்ச்சியும், முதிர்ச்சியும் கனிந்து கசிந்த கருத்தோட்டமாக காட்சி தருகிறது கட்டுரை ஒவ்வொன்றும். மாணவர் முதலாக ஆய்வாளர் உள்ளிட்ட, அனைவரும் படித்தறியத் தக்க பாங்கில், படைக்கப் பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்தும் பயன் தருவனவாகும்.
கா.முருகையன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us