காஞ்சி மாமுனிவருக்கு நெருக்கமானவரும், ஸ்ரீ வித்யா உபாசனையில் சிறந்து காஞ்சி காமகோடி அம்மனை தொடர்ந்து உபாசித்தவருமான ஸ்ரீ நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள் கருத்தை தாங்கி வெளிவந்த நூல். ‘நகரங்களில் காஞ்சி’ என்ற புகழ்பெற்ற தெய்வாம்சம் நிறைந்த இந்நகரின் எல்லைகள், காஞ்சி காமாட்சியின் அருள்திறம், அதை தெளிவாக்கும் புராணத் தகவல்கள், வண்ணப்படங்கள் ஆகியவற்றுடன் இந்த நூல் வெளிவந்திருப்பது சிறப்பாகும். ஆன்மிக அன்பர்கள் பெரிதும் விரும்பும் நூல்.