தமிழில் வெகுஜன பத்திரிகைகளில் எழுதும் நகைச்சுவை எழுத்தாளர்கள் அதிகரித்துள்ள போதும், நகைச்சுவை புத்தகங்கள் எழுதும் எழுத்தாளர்கள் அருகியே காணப்படுகின்றனர்.
அந்த குறை நீங்க, நே(நோ)யர் விருப்பம் எழுதியுள்ளார், மனநல மருத்துவர் ராமானுஜம்.
ஒவ்வொரு கட்டுரையும் சம்பவங்களாக விரிகிறது. விசிஷ்டாத்வைதம், ரயில் விரோதம், மாற்று மருத்துவம், ரயில் விரோதம், வராத வரலாறு, ஆசை முகம் மறந்து போச்சே, வலது கை எடுப்பதை இடது கை அறியாது, ஆய்வுத் தொந்தரவு, சொல்வதை செய், நேரமிது நேருமிது போன்ற கட்டுரைகள், வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும், அவை சிரிக்க வைப்பதற்கு மட்டுமே அல்ல என்பதை, படித்து முடித்த பின் உணர முடிகிறது.
நிறைய சம்பவங்கள்; எல்லாமே யதார்த்த வாழ்க்கையோடு பொருந்திப் போகின்றன. நகைச்சுவைக்கு பஞ்சமில்லை. பல இடங்களில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல், கருத்தை கூறிஉள்ளார், மருத்துவர்.