முகப்பு » கவிதைகள் » யோகிராம் கவிதை சோலை

யோகிராம் கவிதை சோலை

விலைரூ.150

ஆசிரியர் : கவிஞர் ஜெ.ஏகாம்பரம்

வெளியீடு: ஜெயா பதிப்பகம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
யோகி ராம்சுரத்குமார் அருள் பெற்றவர்கள் வாழ்க்கைப் பாதை உன்னதம் நோக்கி நகர்வதை காட்டும் கவிதைகளின் தொகுப்பு நுால். புண்ணிய பூமியான திருவண்ணாமலையில் பகவான் ஸ்ரீரமணர், யோகி ராம்சுரத்குமார் போன்ற மகான்கள் வாழ்ந்துள்ளனர். காசியில் இருந்து வந்து திருவண்ணாமலையிலேயே தங்கி, பக்தர்களுக்கு அருளியவர் விசிறி சாமியார் என அழைக்கப்படும் பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் புகழைப் பாடும் கவிதைகள் உள்ளன.

நுாலைப் படிப்போருக்கு, யோகி ராம்சுரத்குமாரின் தியானக் கூட மெய்ஞான உயர்வை பெறுவது போல் உள்ளது. இந்த கவிதைச்சோலை தியான உணர்வு தரக்கூடியது. இதில் உள்ள 49 பாடல்களில், யோகியின் பேரருள் பொழியும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளது. படித்தால் தெய்வீக உணர்வுடன் ஆசிரமத்தில் நுழைந்த அனுபவம் கிடைக்கும். பூஜை அறைகளில் இருக்க வேண்டிய தெய்வீக நுால்.
முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us