முகப்பு » வாழ்க்கை வரலாறு » மனம் நிறைந்த மக்கள்

மனம் நிறைந்த மக்கள் சேவை

விலைரூ.870

ஆசிரியர் : எம்.எம்.இராஜேந்திரன்

வெளியீடு: மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
அரசில் உயர் பதவிகள் வகித்தவர் எழுதிய சுயசரிதை நுால். திட்டங்களை நிறைவேற்றிய பாங்கு படிப்பினை தரும் வகையில் வெளிப்பட்டுள்ளது. நினைவலைகள் சுவாரசியம் தருகிறது. குழந்தைப் பருவம், பள்ளி, கல்லுாரி படிப்பு, அரசு பணி அனுபவங்கள் தெளிவாக உள்ளன. தமிழக தலைமைச் செயலர், ஒடிசா மாநில கவர்னர் என அனுபவங்களை தெளிவாக்குகிறது.

பொம்மையல்ல கவர்னர் பொறுப்பு என்பதை நிரூபிக்கிறது. எம்.ஜி.ஆர்., மரணம் போன்ற வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளில் பின்னணியை வெளிப்படுத்தியுள்ளது. திட்ட நடைமுறையில் சிக்கல் நீக்கும் மேலாண்மை உத்திகளை பதிவு செய்துள்ளது.

ஆங்கில நுாலை, எளிய தமிழ் நடையில் மொழியாக்கம் செய்துள்ளார் முனைவர் த.சித்தார்த்தன். உரிய இடங்களில் வண்ணப்படங்கள் தரப்பட்டுள்ளன. நம்பிக்கையூட்டி, சமூக மலர்ச்சிக்கு வழிகாட்டும் சுயசரிதை நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us