சுய முன்னேற்றத்தை ஊக்குவித்து, தன்னம்பிக்கையை ஊட்டி, அளவிலா ஆற்றல் பொதிந்து மறைந்து கிடப்பதை வெளிப்படுத்தும் நுால். அதை வெளிக்கொணர்வதற்கான வாய்ப்புகளை நிரல்படுத்துகிறது.
கலந்துரையாடல்கள், பயிற்சி வகுப்புகள், நடைபெற்ற நிகழ்வுகள், அண்மையில் நிகழ்வுற்ற நடைமுறை உதாரணங்கள், குட்டிக் கதைகள் மூலம் வாய்ப்புகள் வரும் முன் ஆயத்தமாகும் முறை பற்றி விரிவாக விவரிக்கிறது. நிறைய செய்ய வேண்டும் என்பதை விடவும், நிறைவாக செய்ய வேண்டும் என புரிய வைக்கிறது.
வெற்றி பெற்றவர், ஆற்றலையும் உழைப்பையும் விரும்பும் ஒன்றில் குவித்திருப்பதை பற்றி கூறுகிறது. வாழ்வில் வெற்றி பெற விரும்பும் ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள் நிறைந்துள்ள நுால்.
– புலவர் சு.மதியழகன்