முகப்பு » கவிதைகள் » பூக்களை

பூக்களை அர்ச்சிப்பவள்

விலைரூ.130

ஆசிரியர் : வானதி சந்திரசேகரன்

வெளியீடு: அட்சயம் வெளியீடு

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மனதில் இடம் பிடிக்கும் 135 குறுங்கவிதைகளை உடைய தொகுப்பு நுால். கவிதைகள் ஒவ்வொன்றும் சராசரியாக எட்டு சொற்களை உடையது.

அனுபவித்த கஷ்டங்கள் மறைவதற்குள், செல்லும் பாதையும் கடினமாகிறது என்ற கருத்தை, ‘பாதச்சூடு’ என்ற கவிதை உணர்த்துகிறது. மனிதர் செயல் கண்டு, பச்சோந்திகள் பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிப்பதாக ஒன்றில் பாடப்பட்டுள்ளது.

மேகங்களின் மோதலால் இடியுடன் மின்னல் வெளிப்படும். இந்நிகழ்வை, ‘மேகங்களின் முத்தம், வெட்கத்தில் ஓடி மறைந்தது மின்னல்’ என கவிதை ஆக்கியிருப்பது சிறப்பு. இதுபோல ஒவ்வொரு கவிதையும் வாசிப்பவர்களுக்கு அலாதி அனுபவத்தையும், ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் தரும். இனிய கவிதை தொகுப்பு நுால்.

வி.விஷ்வா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us