முகப்பு » கவிதைகள் » பூப்பந்து மௌனங்கள்

பூப்பந்து மௌனங்கள்

விலைரூ.140

ஆசிரியர் : வானதி சந்திரசேகரன்

வெளியீடு: அட்சயம் வெளியீடு

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஆழ்ந்து கிடந்த மவுனத்தின் உணர்ச்சியாக வெளிவந்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். காலத்தால் அழிக்க இயலாத பால்ய நினைவுகள், இளமைக் காதலின் மெல்லிய உணர்வுகள் இழையோடுவதை காண முடிகிறது.

‘உன் கண்மொழி தரும் இதங்கொண்டு உன் மவுனம் தரும் வலிகளுக்கு ஒத்தடமிட்டுக் கொள்கிறேன்’ என புனைகிறது. ‘துணை தவிர்த்த அன்றில் பறவையாய் நித்தமும் உன் நினைவுகளுடன்’ என்று பாடுகிறது. ‘நெடிய இரவு நாளும் வேண்டும் உன் நெஞ்சில் சாய்ந்து துயில வேண்டும்’ என உணர்வை கொட்டுகிறது.

காதலின் நெருக்கம் நெஞ்சில் ஊற்றாய் நினைவுகளின் சாரலாய் பதிவிடப்பட்டுள்ளது. அது மயிலிறகாய் மனதை வருடுகிறது. மரபுக் கவிதைகளுக்குரிய சொற்கட்டுகளுடன் உள்ளது. காதலர் மனதை கவ்வும் நுால்.

– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us