கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
உண்மைகள் மெய்ப்பொருள் அல்ல. அவை வெறும் சோப்புக் குமிழிகளைப் போன்றவை. ஆம். ஒரு சோப்புக் குமிழி இருககிறது- ஆனால் அது இருப்பதும் இல்லாததும் ஒன்றுதான். மெய்ம்மை என்றும் நிலைத்திருப்பது- அது மெய்ம்மையாக இருந்தது. மெய்ம்மையாக இருக்கிறது. மெய்ம்மையாக இருக்கும். மெய்ம்மை வேறுவிதமாக இருப்பதற்கு வழியே இல்லை. உண்மைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இவை அவற்றை விளக்குவதைப் பொருத்து உள்ளன. ஒரே உண்மை ஆயிரத்தொரு விதங்களில் விளக்கிச் சொல்லப்படலாம். அதைத்தான் நாம் எல்லோரும் செய்து கொண்டு இருக்கிறோம். இல்லாவிட்டால் இத்தனை மதங்கள், இத்தனை தத்துவங்கள், இத்தனை கொள்கைகள் தேவையே இல்லை. மெய்ம்மை என்பது ஒன்றுதான். ஞானிக்குத் தத்துவம் கிடையாது. ஞானிக்குக் கொள்கை கிடையாது. ஏனெனில் அவரிடம் மெய்ம்மையே உள்ளது.