முகப்பு » ஆன்மிகம் » ஸ்ரீசிவ மகா புராணம்

ஸ்ரீசிவ மகா புராணம்

விலைரூ.320

ஆசிரியர் : எஸ்.கே.ஸ்வாமி

வெளியீடு: பிரேமா பிரசுரம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
நூலாசிரியர்: துர்க்காதாஸ் எஸ்.கே.சுவாமி. வெளியீடு: பிரேமா பிரசுரம், 59, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை-600 024. (பக்கம்: 1184. விலை:)
பரம பிதாவான சர்வேஸ்வரன் மற்றும் உலக மாதாவான அன்னை பராசக்தி ஆகியோரின் திவ்ய லீலைகளை விவரிக்கும் மகோன்னதமான புராண நூல் இது. கணபதி, குமாரக் கடவுளாகிய சுப்ரமணியர், பிரம்ம தேவர், திருமால், ராமர், கிருஷ்ணர் மற்றும் ஏராளமான முனிபுங்கவர்
களோடு சிவபெருமானுக்கு உள்ள தொடர்பு, மகத்தான சம்பவங்கள் என ஒன்றைத் தொட்டு ஒன்றாய் சகல புராண - இதிகாசங்களின் ஊடே நுழைந்து, மூழ்கி முக்குளித்து அரிதினும் அரிதான செய்திகளின் பொக்கிஷமாய் உருவாகியுள்ளது இந்த நூல்.
ஏராளமான சித்திரங்களும் உள்ளன. முன்னர் மூன்று தனித்தனி பாகங்களாக வெளிவந்த சிவமகா புராணம் இப்போது ஒரே நூலாய், நல்ல தாளில், நல்ல எழுத்துக்களில் தெளிவாக அச்சிட்டு, உயரிய பதிப்பாக வெளியாகியுள்ளது கூடுதல் சிறப்பு. சிவ பூஜை விதிமுறைகள், தேவையான மந்திரங்கள், சிவ சகஸ்ரநாமங்கள் போன்றவையும் இடம் பெற்றிருப்பது மிகவும் உபயோகமானது. படித்து மகிழவும், பூஜித்துப் போற்றவும் தக்க நூல். சிவ பக்தர்கள் சிரம் மீது ஏந்தி மகிழ்வர்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us