முகப்பு » ஆன்மிகம் » மந்திரங்களின்

மந்திரங்களின் மகத்துவம்

விலைரூ.100

ஆசிரியர் : ராஜகோபால கனபாடிகள்

வெளியீடு: வைதிகஸ்ரீ

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
வைதிக ஸ்ரீ புது எண் 448, டி.டி.கே. ரோடு,
ஆழ்வார்ப் பேட்டை , சென்னை .600 018. தொலைபேசி: 91-44-24361210. (பக்கம் :120)

தனி மனிதனை உயர்நிலைக்கு கொண்டு செல்பவை மந்திரங்கள். நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி மந்திரம் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். மந்திரங்களை எப்படித் தேர்வு செய்வது? அதற்குள்ள வழிகள் ஆகியவற்றை இந்த நூல் விளக்குகிறது. மந்திரம் என்பது தமிழிலும் சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டிலும் ஒரே பொருளைத் தருகிறது என்று ஆசிரியர் நூலைத் துவக்குகிறார்.
ருத்ராட்சம் அணிவது இப்போது நாகரிகம், அதன்
விற்பனையும் பெரிதாகியிருக்கிறது. ருத்ராட்சம் குறித்து பக் 65 முதல் ஆறு பக்கங்களில் இருக்கும் தகவலைப் படிப்பவர்கள் இதை வாங்குமுன் தெளிவாகச் செயல்பட முடியும். பொதுவாக மனதில் தீய எண்ணம் விலக மந்திரங்கள் உதவும் என்ற கருத்தை வலியுறுத்தும் இதில், பல விளக்கங்கள் உள்ளன. சாஸ்திர, ஆன்மிக நாட்டம் கொண்டவர்கள் நிச்சயம் இந்த நூலை ஆர்வமுடன் வாங்கிப் படிக்கலாம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us