மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், 4, மாங்கொல்லை, கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை-600 004. (பக்கம்: 112).
உலகப் பொதுமறை "திருக்குறள்' தந்த திருவள்ளுவர் அவதரித்த திருத்தலம், சென்னையில் உள்ள மயிலாப்பூர் என்று ஒரு வரலாறு உண்டு. இங்கு திருவள்ளுவருக்கு ஒரு திருக்கோவிலும் நெடுங்காலமாக இருந்து வருகிறது.
அருஞ்சிறப்புமிக்க ஆன்மிக நூல்கள் பல எழுதியுள்ள பருத்தியூர் சந்தானராமன், மயிலையின் பெருமைமிகு வரலாறு மற்றும் திருவள்ளுவரின் திவ்ய சரிதம், ஏராளமான புராணச் செய்திகள் எனச் சிறந்த பொக்கிஷமாக அமைந்துள்ள இந்நூலை, திருக்குறள் உயராய்வு மற்றும் ஆராய்ச்சி மையம் மூலம் டாக்டர் சேயோன் வெளியிட்டிருப்பது போற்றத் தக்க செயல். தமிழன்பர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.