திருக்குறளை ஆய்வு செய்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். உலக அமைதியும் திருவள்ளுவரும் தொடங்கி, நிறைவுக் கட்டுரையாக திருக்குறளும் தமிழ் வளர்ச்சியும் என, 10 கட்டுரைகளுடன் நிறைவெய்துகிறது.
திருக்குறள் கருத்துக்களை உள்வாங்கி நுண்மாண் நுழை புலத்தோடு விளக்கியுள்ளார். திருக்குறள் உலக அமைதி குறித்து விரிவாகப் பேசுகிறது. உலகம் என்ற சொல் திருக்குறளில் எத்தனை இடங்களில் என்னென்ன பொருண்மைகளில் கையாளப்பட்டுள்ளன என்று வரிசைப்படுத்துகிறது.
திருக்குறளைப் பற்றி உ.வே.சாமிநாத அய்யர் மற்றும் பலரின் கருத்துக்கள் வரிசைப்படுத்தப் பட்டுள்ளன. திருக்குறள் காட்டும் அரசு என்னும் தலைப்பில் நாடு எவ்வாறு அமைய வேண்டும் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை எடுத்துக் காட்டு தந்து விளக்கும் நுால்.
-– பேராசிரியர் இரா.நாராயணன்