சமூக நீதி, தீண்டாமை எதிர்ப்பு, பெண் விடுதலை, மொழி மற்றும் மண் பற்று குறித்து, தமிழ்ச் சமூகம் 1,000 ஆண்டுகளாய் பேசி வருவது பற்றி உரைக்கும் நுால். ஒவ்வொரு காலகட்டத்திலும் வழிகாட்ட புதுப் புது சிந்தனையாளர் தோன்றிய வண்ணம் இருக்கின்றனர். மறந்தும், மறைத்தும் வைக்கப்பட்ட அயோத்திதாசரை, சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வரும் முயற்சியாக வந்துள்ளது.
அப்பணியில் தீவிரமாய் இயங்கும் பேராசிரியர் டி.தருமராஜ், அயோத்திதாசரையும் அவரது கருத்தியலையும் எழுதியது குறித்து பேசுகிறது. அரசியல், பண்பாடு, மதம், இலக்கியம், வரலாறு குறித்த மாற்றுப் பார்வைக்கு வித்திட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறது.
எழுத்தாளர் ஜெயமோகன் துவங்கி, பத்திரிகையாளர் சமஸ் மற்றும் ஆய்வாளர்கள் பலரும் வெளிப்படுத்தியுள்ள பார்வை, அயோத்திதாசர் குறித்த மதிப்பீடு விரிவாக எழுதப்பட்டு உள்ளது. ஒரு கருத்தை பல கோணத்தில் ஆராயும்போது தான், சரியான முடிவுக்கு வர முடியும். அந்தப் பணியை செவ்வனே செய்திருக்கிறது இந்தப் புத்தகம்.
– பெருந்துறையான்