சனாதனத்தை வள்ளலார் பார்வையில் விளக்கும் நுால். சனாதனம் என்றால் என்ன, வேதமே சனாதன தர்மம், வள்ளலார் காட்டிய கடவுள், தன்னை அறிதல், தமிழரின் தெய்வம், ராமானுஜரின் சிந்தனை, சுத்த சன்மார்க்க நன்நீதி போன்ற தலைப்புகளில் விரிவாகத் தருகிறது.
வேதங்களைப் படிக்க முடியாதவருக்கு அவற்றின் நிலையை, கதைகளால் உரைக்கும் புராண, இதிகாசத்தை வரலாற்று ஆவணமாகவே சனாதன தர்மம் ஏற்றுக்கொள்வதாக கூறுகிறது. வேதாந்த கருத்துக்கு விளக்கம் தருகிறது. சிவன் என்ற சொல் உருவானதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறது.
பூமி எல்லா உயிர்களுக்கும் பொது என உணர்ந்து வாழச் சொல்கிறது. வள்ளலார் வழங்கிய சனாதன தர்மத்தை பல கோணங்களிலும் ஆராய்ந்து சொல்லும் நுால்.
-– பேராசிரியர் ரா.நாராயணன்