கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
உலகம் தொல்லைகளின் கூடாரம், மனிதனுக்கு, அதிலிருந்து தப்ப வேண்டிய கடமை இருக்கிறது. எல்லா மனிதனுக்கும் வரும். அது யாரையும் அது யாரையும் விடுவதில்லை. ஆரம்ப முதலே தொல்லைகள் ஏற்படாமல் ஒதுங்கிக் கொண்டு வாழ்க்கையைச் செப்பனிட்டுக் கொள்பவர்கள்தான், கவலையற்ற மனிதர்களாக வாழ்கிறார்கள். பின்பு வரும் தொல்லைகளைத் திடமனது கொண்டு சமாளிக்க வேண்டும். முக்கியமாக, எதையும் சாதாரணமாகக் கருதும் மனப்பக்கவம் வேண்டும். மனசுதான் காரணம் என்பார்கள் கிராமங்களில். எதற்குமே மனம்தான் கணக்கிடுகிறது. சிறியவற்றைப் பெரிதாக்குவதே மனம் என்னும் பூதக்கண்ணாடிதான். மனதைத் திருப்பிப் படித்தால் பெரியனயாவும் சிறியனவாகத் தோன்றுகின்றன.