Advertisement

கல்வெட்டுக்கள் - வினா - விடை விளக்கம்


கல்வெட்டுக்கள் - வினா - விடை விளக்கம்

₹ 110

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

"மாணிக்கவாசகர் காலம் கணிக்கத் தளவாய் புரச் சாசனம் துணைபுரிவது எவ்வாறு? (பக்.63) இவ்வினாவிற்கு, "வரகுணனாம் தென்னவன் ஏத்தும் சிற்றம்பலத்தான் "மயலோங்கு இருங்களியானை வரகுணன் வெற்பு எனும் திருக்கோவையார் பாடல்களைக் சுட்டி, பாண்டிய அரசர் மரபில், வரகுணன், எனும் பெயருடன் இருவர் குறிக்கப் பெறுவதையும், கி.பி.,792 முதல் ஆட்சி செய்த வரகுணன் முதல் வரகுணன் என்பது மாணிக்கவாசகர் காலப் பாண்டியன் என்பதை சதாசிவ பண்டாரத்தார் கருத்து என சான்றுடன் விளக்கியுள்ளது நூலாசிரியரின் ஆய்வறிவை உணர்த்துகிறது. தமிழ் எழுத்து வளர்ச்சி நிலையை செப்பேடு, கல்வெட்டு, சாசனங்கள் மூலம் விளக்கும் நூலாசிரியர், கூரம் செப்பேடுகள், தளவாய்புரச் செப்பேடுகள், வீரபாண்டியனின் சிவகாசிச் செப்பேடுகள், மீனாட்சிபுரக் கல்வெட்டு, சிற்றண்ணல்வாயில் கல்வெட்டு, வேளூர் நடுகல், ரெட்டியூர் நடுகல் என பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளைத் தொகுத்துள்ளார். தொல்லியல், ஆய்வாளர்களுக்கும், வரலாற்று ஆர்வலர்களுக்கும் பயன்படக்கூடிய நூல்.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்