மகாபாரதத்தின் சாராம்சத்தை படக் கதையாக தந்து குதுாகலிக்க வைக்கும் நுால். அஸ்தினாபுரம் குரு தேசத்தலைநகரில் சந்தனு சத்யவதியில் துவங்கி, மகாபாரதப் போர் முடிந்து, கவுரவர்கள் அழிந்த பின், தர்மபுத்திரர் பட்டாபிஷேகம் வரை சங்கிலித் தொடராக தொய்வு இன்றி உள்ளது. கதைக்கு படங்கள் பெரிதாகவும், அழகாகவும் உள்ளன....