Advertisement
மணிமேகலை பிரசுரம்
அரசியல்
மக்களால் போற்றப்படும் தேசத் தந்தை காந்தியடிகள், ஈ.வெ.ரா., வாழ்க்கை மற்றும் பொது நலத் தொண்டுகளை ஆராயும் நோக்கில் ஒப்புமையாக எழுதப்பட்ட நுால். இருவருக்கும் உள்ள தனிப்பண்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. நேரம் தவறாமை, சிக்கனம், மேடைப் பேச்சு, மொழிப்பற்று, மத நல்லிணக்கம் போன்றவற்றை குறிப்பிட்டுள்ளார். பெண்...
கதைகள்
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பொன்மொழிகளை அடிப்படையாக கொண்டு விளக்கி எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் வடிவில் நுால். எல்லா கதைகளிலும் அப்துல் கலாமின் போதனை, காந்தியடிகளின் கொள்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. வள்ளுவரின் வரிகள் மேற்கோளாக காட்டப்பட்டு உள்ளன. ஜாதி, மதம் கடந்த சமத்துவ சமுதாயம் காண விழையும்...
வாழ்க்கை வரலாறு
மருதுபாண்டியரின் வீரம் குறித்து சுவைபட எழுதப்பட்டுள்ள புதின நுால். மருது சகோதரர்கள் மற்றும் ஊமைத்துரை படை வீரம் சிறப்பாக பேசப்பட்டுள்ளது. இதற்குச் சான்றாக, பெரிய மருது புலியுடன் தனிமனிதனாக போராடி வென்ற இடம், ‘புலிப்பள்ளம்’ என்று சிறப்புப் பெயர் பெற்றிருப்பது கோடிட்டுக்...
வேலுார் புரட்சியை மையமாக்கிய நாவல். திப்பு சுல்தானின் இறப்பை சாதகமாக்கி, ஆங்கிலேயர் செயல்பட்டதை வரலாற்று அடிப்படையில் கூறுகிறது. வேலுார் புரட்சியின் கதாநாயகனாக ஷேக் காசிம், திப்பு சுல்தான் மகன் மொய்சுதீன், அவன் காதலி அகிலா என பாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. நாடகக்குழு வழியே களத்தை அமைத்திருப்பது...
ஆன்மிகம்
திருவேங்கடத்தான் மீது பாடப்பட்ட பக்திப்பாடல்களின் பாமாலை தொகுப்பு நுால். வைணவ தத்துவங்கள் மட்டுமின்றி, வாழ்வாங்கு வாழும் எல்லா சமயங்களையும் அலசும் வண்ணம் அமைந்துள்ளது. காயத்ரி மந்திரப்பொருளும், ராவணனை வெல்வதற்கு அகத்தியர் உரைத்த ஆதித்ய ஹ்ருதயப்பொருளும், தியான முறைகளும், ராமானுஜரின் விசிஷ்டாத்வைத...
வரலாறு
பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கீழாநிலைக்கோட்டை மற்றும் வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து புனையப்பட்டுள்ள நாவல். நகரத்தார், வல்லம்பர் சமுதாய நட்பையும், இணக்கத்தையும் விவரிக்கிறது. பாம்பாற்று நாட்டைச் சேர்ந்த வல்லம்பர் தலைவரின் மகள் வள்ளிமயில், சாத்தப்பச் செட்டியாரின் மூத்த மகள் கண்ணம்மா,...
மகப்பேறு மருத்துவரான டாக்டர் தாமரை ஹரிபாபு எழு தியுள்ள சரித்திர நாவலான இது, 1545, மே 21ல் துவங் குகிறது. கதை, கோட்டை, கொத்தளங்களில் நுழைந்து, சேர, சோழ, பாண்டிய நாடு களில் பயணித்து, இலங்கை, மலேசியாவுக்கும் சென்று, சம யம், தத்துவம் உள்ளிட்டவற்றை...
சிவகங்கைச் சீமையில் போர்களும், வெற்றி, தோல்விகளும் சரித்திர தொடர்கதை போல் விறுவிறுப்பான நடையில் பதிவு செய்துள்ள நுால். தொய்வு இன்றி விரிவான வரலாற்றை தருகிறது.தேதி வாரியாக வரலாற்று சம்பவங்கள் பதிவிடப்பட்டுள்ளன. மருது சகோதரர்கள் மிகவும் கண்ணியமாக செயல்பட்டதை குறிப்பிடுகிறது.மருது பாண்டியர்களின்...
தமிழ்மொழி
தமிழில் அன்பு என்ற நெகிழ்வு பண்பை குறிப்பிட பயன்படும் சொற்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள நுால். மனித நாகரிகத்தை உன்னதப்படுத்தும் சொற்களின் சிறப்புகளை எடுத்துரைக்கிறது. தமிழ் மொழியில் அன்பை குறிப்பிடும் 77 சொற்கள் பட்டியல் முதலில் தரப்பட்டுள்ளது. அதை உச்சரிக்கும் போது ஏற்படும் உணர்வுகளை...
தவெக எம்எல்ஏவை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் தியேட்டர் முற்றுகை! Virudhunagar
வங்கதேசத அதிபர் திடீர் ராஜினாமா: அரசியலில் பரபரப்பு Bangladesh President resigned
மத்திய அமைச்சர் ராஜினாமாவுக்கு காரணம் என்ன? Ravneet Singh
ஹார்மூசில் சிக்கிய 6,000 மாலுமிகளை காப்பாற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தல்
இமாச்சலில் கனமழை நிலச்சரிவால் பயங்கர விபத்து! Himachal Pradesh
Breaking ரயில்வே இணை அமைச்சர் ராஜினாமாவால் பரபரப்பு! Ravneet Singh