/ கதைகள் / அன்றும்... இன்றும்... என்றென்றும் நீ...! (பாகம் - 4)
அன்றும்... இன்றும்... என்றென்றும் நீ...! (பாகம் - 4)
பட்டதாரி பெண் வாழ்க்கை நிகழ்வை சுற்றி நகரும் நாவல் நுால். பெண்ணுக்கு வரும் கனவு, வாழ்க்கையை எப்படி புரட்டி போட்டது என்பது விறுவிறுப்புடன் கூறப்பட்டு உள்ளது. வரமாக வரும் காதலன், ஒரு கட்டத்தில் பிரிவதற்கு யார் காரணம் என அலசுகிறது. மனதை புரிந்து கொண்ட இதயங்களின் செயல்பாடுகளை பல கோணங்களில் உரைக்கிறது. தியாகம் செய்வதால் வாழ்வில் ஏற்பட்ட திருப்பத்தை உணர்வு கலந்து கூறுகிறது. காதலன் வாழ்க்கை எந்த திசையில் சென்றது, இணையும் சந்தர்ப்பம் கிடைத்ததா, விருப்பம் கைகூடியதா என்பதற்கு விடை காண்கிறது. காதல், மர்மம், அன்பு, கனவுகளுடன் அமைந்திருக்கிறது. நிம்மதியை தரும் இடங்களே சுவாரசியம் நிறைந்தது என உணர்த்தும் நாவல். – டி.எஸ்.ராயன்




