வாசகர்கள் கருத்துகள் (1)
Danomika
ஜன 08, 2026 08:50 PM
Sari
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்! Send Post
உலக புகழ்பெற்ற கணித மேதை ராமானுஜன் நினைவாக வெளியிடப்பட்டுள்ள நுால். அவரது அயராத பணிகளை பலவித கோணங்களில் எழுதப்பட்டுள்ளன. பல துறை அறிஞர்கள் சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளனர்.உலக அளவில் கணிதத்தில் புகழ் பெற்றவரின் வாழ்க்கை போக்கை முதல் கட்டுரை வெளிப்படுத்துகிறது. சென்னை துறைமுகத்தில் ஒரு கப்பலுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளதை உரைக்கிறது. தொடர்ந்து, கணித சாதனைகள் மற்றும் அதனால் ஏற்பட்ட தாக்கங்கள் பற்றிய விபரம் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு படைப்பும் ராமானுஜரின் திறனை, அறிவாற்றலை வெளிப்படுத்துகின்றன. ராமானுஜர் நினைவை போற்றி, அறிவியல் ஒளி இதழில் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஆக்கங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால்.– ராம்
Sari