/ சமயம் / மதம் தரும் பாடம்

₹ 180

மதங்களின் தோற்றத்தால் உலகளவில் ஏற்பட்ட தாக்கங்கள், மாற்றங்களை விவாதிக்கும் நுால். நபிகள் நாயகம் காலத்து நிகழ்வுகளை அறிய வைக்கிறது. மனிதரிடையே ஏற்பட்டிருந்த கோட்பாட்டுப் பிரிவுகளை அறிய வைக்கிறது. மதங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் உளவியல் பல்வேறு நன்மை, தீமைகளுக்கு வழிவகுப்பதை உணர்த்துகிறது. மதத்திற்கு வெளியே புறக்காரணிகளால் சமூக உறவுகளில் ஏற்படும் வேறுபாடுகளை எடுத்துக் கூறுகிறது. புராணக்கதைகளை மேற்கோள் காட்டி பல்வேறு கருத்தோட்டங்களை முன்வைக்கிறது. இறையருள் உடையவன் பேரறிவாளனாக இல்லாவிட்டாலும் மாபெரும் சாதனை புரிவான்; தீங்கு செய்பவன் தீங்குகளால் அழிவான் என்பதை, பழங்கதை உதாரணங்களோடு விளக்கும் நுால்.– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு