/ பொது / உயிரில் கலந்த என் ஆசிரியப் பணி!
உயிரில் கலந்த என் ஆசிரியப் பணி!
ஆசிரியப்பணி அனுபவங்களை தொகுத்து தரும் நுால். கல்வி, போதனை, சக ஆசிரியர்கள் குறித்து கூறப்பட்டுள்ளது. பணியாற்றிய பள்ளிகளில் கற்பித்தல் நடைமுறை விளக்கி சொல்லப்பட்டிருக்கிறது. பாடங்களை ஆடல், பாடல், நாடகம், கருத்தரங்கம், கோலாட்டம், கும்மி வழியாக இணைத்து வகுப்பறையை வசப்படுத்திய விதம் கவனத்தை ஈர்க்கிறது. மாணவர்கள் பேச்சு திறனை மேம்படுத்த நடத்திய உரையாடல், தெளிவு ஏற்படுத்தியதை வெளிப்படுத்துகிறது. சரியாக உச்சரித்து பழக, ‘ஏழைக் கிழவர் வியாழக்கிழமை வாழைப்பழத்தால் வழுக்கி விழுந்தார்’ என்ற வாக்கியத்தை பயன்படுத்தி நெறிப்படுத்திய விதம் அற்புதமாக உள்ளது. செய்யுள் உணர்ச்சி நிறைந்த சுயசரிதை நுால். – ஊஞ்சல் பிரபு




