/ பயண கட்டுரை / சில பயணங்கள் சில பதிவுகள் (முதல் பகுதி)
சில பயணங்கள் சில பதிவுகள் (முதல் பகுதி)
தமிழகத்தின் அரசியல் நிகழ்வுகளை அசை போட வைக்கும் அனுபவ பதிவு நுால்.இளமைக்கால வறுமையை உடைத்தெறிய சாலையோர வியாபாரம், கிரிக்கெட் மைதானத்தில் காபி விற்பனை என அனுபவங்களை சொல்கிறது. மாணவப் பருவத்தில் போராட்டங்களில் ஈடுபட்டது, அவசர நிலை பிரகடன எதிர்ப்பு என நிகழ்வுகளை அனுபவ வழியாக எடுத்துரைக்கிறது. அக்காலக்கட்ட அரசியல் நிகழ்வுகளை விவரிப்பதுடன், களத்தில் ஆளுமைகளை சந்தித்ததும் நிரல்படுத்தப்பட்டுள்ளது. ஆன்மிக பிரமுகர்கள் வாரியார், ரமணர் போன்றோர் பற்றியும் தகவல்கள் உடைய நுால். – புலவர் சு.மதியழகன்