/ சிறுவர்கள் பகுதி / தமிழா...! தமிழ் படி...!
தமிழா...! தமிழ் படி...!
தமிழைக் கற்பித்தலில் புதிய அணுகுமுறை தேவை. அதைக் குழந்தைப் பருவ கல்வியில் இருந்து துவங்க வலியுறுத்தும் முதல் நுால் இது. வாசிப்பை சொற்களில் சொல்லித் தர வலியுறுத்தும் ஆசிரியர், இருவர் இருவராக கைதட்டியபடி சொற்களை உரக்கக் கூறி வாசிக்கத் துாண்டும் வகையில் வண்ணப்படங்களுடன் வெளியிட்ட முறை புதிய உத்தியாகும். மூன்று வயது முதல், 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உதவும் இப்புத்தகம் ஆரம்பப் பள்ளிகளுக்கு நிச்சயம் உதவிடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.