/ கட்டுரைகள் / வெற்றிப் பாதையிலே...
வெற்றிப் பாதையிலே...
மாணவ – மாணவியரை மனதில் கொண்டு அறம் போதிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஆத்திசூடி சொல்லியுள்ள கருத்துகளை மையமாக கொண்டு தரப்பட்டுள்ளது. ஆத்திசூடி அடிகளுக்குப் பொருத்தமாக அறக்கருத்துகளை உணர்த்தியிருப்பது சிறப்பு. சினம் தீயைப் போன்றது; உன்னை நீயே வெளிப்படுத்த வேண்டும்; ஈவதால் கிடைக்கும் சிறப்பு; பெருமை மிக்க செயல்களால் வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும்.அறிவியல் மெருகு ஏறுவதற்கு எண்ணும், எழுத்தும் இன்றியமையாதவை; பிறரை வருத்தி வாழக்கூடாது; நோன்பு இருந்தால் லட்சியத்தை அடையலாம். இது போன்ற நல்ல கருத்துகளை உடையது. நெஞ்சில் பதியும் வண்ணம் அமைந்துள்ளன. இன்றைய மாணவ – மாணவியர் போற்றிப் பாதுகாக்க வேண்டிய நுால்.– ராம.குருநாதன்