/ வரலாறு / விடுதலை வேள்வியில் வங்காள வீரர்கள்
விடுதலை வேள்வியில் வங்காள வீரர்கள்
66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை-78. (பக்கம்: 168) அந்தமான் போர்ட் ப்ளேரில் உள்ள செல்லுலர் சிறையின் வெளியே வைக்கப்பட்டிருக்கும், ஒரு நினைவுத் தூணில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கைதாகி, அந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த தியாகிகளின் பெயர்களை எல்லாம் பொறித்து வைத்திருக்கின்றனர். அந்தப் பட்டியலில் பாதிக்கு மேற்பட்டவர்கள் வங்காளிகள் ஆவர். இந்தியாவுக்கு, சுதந்திரம் வெறும் சாத்வீகப் போராட்டத்தினால் மட்டும் வந்து விடவில்லை. இவர்கள் வீறு கொண்டு போரிட்ட காலம் வரலாற்றில், "வங்காளத்தின் அக்கினி யுகம் என்றே அழைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட வங்காள வீரர்களின், சிலரது வாழ்க்கை வரலாற்றை உணர்ச்சி ததும்ப எழுதியிருக்கிறார் ஆசிரியர்.