/ பொது / ஓராசிரியர் பள்ளியிலிருந்து பல சாதனைகள் படைத்த அரங்கநாதன்
ஓராசிரியர் பள்ளியிலிருந்து பல சாதனைகள் படைத்த அரங்கநாதன்
ஓராசிரியர் பள்ளியில் பணியாற்றிய அனுபவத்தை பதிவு செய்துள்ள நுால். விடாமுயற்சியால் பயின்று ஆசிரியர் பணியை அடைந்த வரலாற்று செய்தி சுவாரசியமாக உள்ளது. வகுப்பு நடத்த கட்டடமே இல்லாமல், மரத்தடியில் பாடம் நடத்திய பாங்கு பற்றி தெரிவிக்கிறது. தோட்டத்தில் காவல் பணிபுரிந்து, சிம்னி விளக்கு வெளிச்சத்தில் படித்தது பற்றி கூறப்பட்டுள்ளது. கோனேரிக்குப்பத்தில் முதன் முதலில் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கற்பித்தலில் உத்திகள் பயன்படுத்திய செய்தியும் உள்ளது. ஆசிரியர் பணிக்கு எடுத்துக்காட்டாக விளங்கியதை கூறும் சுயசரிதை நுால். – புலவர் ரா.நாராயணன்




