/ கட்டுரைகள் / அருண் சரண்யா சிறுகதைகள் (பாகம் – 1)

₹ 300

வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதைப் போல நிலவும் பிரச்னைகளைக் கருவாகக் கொண்டுள்ள சிறுகதை தொகுப்பு நுால். வியாபாரியின் துாண்டிலில் சிக்காமல் தப்பித்தவர் மருமகன் துாண்டிலில் சிக்கிய பரிதாபம்; பாசத்தை அண்டை வீட்டுப் பெரியவரிடம் பெற்ற மகளைச் சந்தேகித்த தந்தை; மெடல் பெறச் சென்று ஏமாந்த தந்தைக்கு ஆறுதல் தந்த சிறுவன் என கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன.எதுவும் தெரியாத அப்பாவி மனைவிக்கு தைரியம் அளித்த அதிர்ச்சி சம்பவம்; மருமகளைத் தேடி அலைந்த தாய்; பார்வைகள் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பதை மனைவிக்கு உணர்த்திய கணவன் என்று குணாதிசயங்களை கூறியுள்ள நுால்.-– இளங்கோவன்


புதிய வீடியோ