/ ஆன்மிகம் / பௌத்த தியானம்

₹ 240

காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் - 629 001. தொலைபேசி : 91-4652-278525. உள் மன ஆழத்தில் உறைந்து மறைந்திருக்கும் மாசுகளை வெளிக்கொணர்ந்து வேரொடு களைத்தெறியவும், உயிர் வாழ்வின் உண்மையை உள்ளது உள்ளவாறு கண்டறியவும், பிணைக்கும் தளைகளிலிருந்து பூரணமாகவும் நிரந்தரமாகவும் விடுதலை பெறவும் ஒரே வழி என்று புத்தர் தமதுஅனுபவத்தில் கண்டுபிடித்து உலகுக்கு அருளிய விபஸ்ஸனா தியான முறை பௌத்தத்தின் தனிச் சிறப்பாகும். பௌத்தம் காட்டும் அமைதித் தியானம். விபஸ்ஸனா தியானம் ஆகிய இரண்டு தியான முறைகளையும் அனைவரும் பயின்று பயன்பெறும் வகையில், விரிவாகவும் தெளிவாகவும் கூறுகிறது இந்த நூல். உறவுகளைத் தியானிப்பது, மரணத்தைத் தியானிப்பது.சூன்யத்தைத் தியானிப்பது, பிரம்ம விஹாரங்களில் உறைதல், ட்சென் தியானம் ஆகியவையும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. வாழ்வின் உன்னதக் குறிக்கோளான புத்த சித்தம் பெறுவதற்கான தியானத்தை விவரிக்கும் இந்த நூல் அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய ஒன்றாகும்.


சமீபத்திய செய்தி