/ பயண கட்டுரை / என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்? அமெரிக்க பயணக் கட்டுரை
என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்? அமெரிக்க பயணக் கட்டுரை
அனைவரும் அறிந்த எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ். தாம் அமெரிக்கா சென்று வந்த அனுபவங்களை எளிதாக எழுதியிருக்கிறார். இந்திய மண்ணின் வாசனையில் ஊறிய எண்ணங்களோடு அமெரிக்காவை காட்டுகிறார். மெரிலாண்ட் சிவா – விஷ்ணு கோவிலில் உள்ள ரெஸ்டாரண்டில், அமெரிக்கன் ஒருவன் லாவகமாக தோசை வார்ப்பதையும், துளை வடை சுடுவதையும் எழுதியிருப்பது போல, பல விஷயங்களை இதில் காணலாம்.தினமலர் வாரமலர் தொடர் கட்டுரையாக வந்த விஷயங்கள் தற்போது நூலாக மலர யார் காரணம் என்பதையும் முன்னுரையில் தெரிவித்த வெளிப்படை பாங்கு சிறப்பானது. மொத்தத்தில், ஆசிரியரின் அமெரிக்க பார்வை வித்தியாசமானது.