/ உளவியல் / இன்றைய மாணவரே நாளைய பாரதம்
இன்றைய மாணவரே நாளைய பாரதம்
பள்ளி மாணவர் மேம்பாட்டுக்கு உளவியல் வழிகாட்டு நெறிமுறைகளை கூறும் நுால். மாணவர் சமூகம் தம் நிலை உணர்ந்து, இளமைக்கால உளவியல் குழப்பங்கள் மற்றும் இடர்ப்பாடுகளை களைந்து வளர நெறிகளை தருகிறது. மன அழுத்தத்தை கையாளும் நடைமுறை பரிந்துரைக்கப் பட்டுள்ளது. மேல்வகுப்புகளுக்கு வந்த பின், போட்டியால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையின் காரணங்களை அலசி தீர்வுகள் கூறப்பட்டுள்ளன. பால பருவத்தில் வாசிப்பை ஊக்குவித்தல், உணவு முறை, செயல்களில் தன்முனைப்பு உருவாக்குதல், பாலியல் விழிப்புணர்வு, இயற்கையோடு இயைந்து வாழும் கலை என கருத்துகளை முன்வைக்கிறது. இனக்கவர்ச்சி, காதல் உணர்வு வேறுபாடுகளை விளக்கி தீர்வு தரப்பட்டுள்ளது.– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு