/ தீபாவளி மலர் / கலைமகள் தீபாவளி மலர் 2015
கலைமகள் தீபாவளி மலர் 2015
வழக்கம் போலவே இந்தாண்டும், கலை, இலக்கிய ஆர்வலர்களுக்கு தீனி போட்டுள்ளது, ‘கலைமகள்’ தீபாவளி மலர். குழந்தைகளுக்காக, அழ.வள்ளியப்பா, கொத்தமங்கலம் சுப்புவின் பாடல்களும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன், மாயாவி உள்ளிட்டோரின் மயக்கும் சிறுகதைகளும் இடம் பெற்றுள்ளன. முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி துவங்கி, மு.வ., ம.பொ.சி., சா.கந்தசாமி, ஏ.என்.சிவராமன், நீதிபதி மு.மு.இஸ்மாயில், நல்லி குப்புசாமி உள்ளிட்ட பல்வேறு துறை வல்லுனர்களின் கட்டுரைகள் வாசகர்களின் கவனத்தை கவர்கின்றன. சுப்புடு, எஸ்.பாலசந்தர் உள்ளிட்டோரின் கலை விமர்சன, கலை ரசனை மிக்க கட்டுரைகள் பாரம்பரிய கலைகளுக்கு வண்ணம் தீட்டுகின்றன.ஜாஷா