/ வாழ்க்கை வரலாறு / கல்வராயன் மலைப் பழங்குடிகளின் இனவரைவியல்
கல்வராயன் மலைப் பழங்குடிகளின் இனவரைவியல்
கல்வராயன் மலையில் ஆய்வு செய்து, மக்கள் வாழ்வு, பழக்க வழக்கங்களை விவரிக்கும் நுால். இயற்கையுடனான வாழ்க்கை மற்றும் சடங்கு முறைகளும் கூறப்பட்டுள்ளன. மலையில் வாழும் பழங்குடி மக்கள் கடைப்பிடிக்கும் நடைமுறை, பூப்பெய்தல், திருமணம், குழந்தைபேறு, மரணம் நிகழ்வில் கடைப்பிடிக்கும் சடங்குகள் குறித்த விபரங்களை தருகிறது.மலை கிராமங்களில் உள்ள வசதி வாய்ப்பற்ற நிலையை கள ஆய்வில் கண்டதாக நெகிழ்வுடன் இந்நுாலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களின் கடின வாழ்க்கை, இயற்கையுடனான போராட்டம், கல்வி வாய்ப்பு கிடைக்காத நிலை, உணவு தேடலில் உள்ள பிரச்னைகளும் பேசப்பட்டுள்ளன.பழங்குடிகளின் வாழ்வை பேசும் நுால். – ஒளி