/ வரலாறு / மதுரை வீரன் மருதநாயகம் வரலாறு
மதுரை வீரன் மருதநாயகம் வரலாறு
மருதநாயகம் என்ற வீரனை பற்றிய கேள்விகளுக்கு சரியான விடையளிக்கும் புத்தகம். வரலாற்றுக் குறிப்புகளை சொல்கிறது. பரங்கியர், ஆர்மீனியர், போர்த்துகீசியர், ஜெர்மானியர், பிரெஞ்சுக்காரர் என வெளிநாட்டு படைகளின் உதவி கொண்டு ஆங்கிலேயரை எதிர்க்கும் அளவிற்கு வளர்ந்தும், இறுதியில் வீழ்த்தப்பட்ட கேள்விக்கும் விடை தருகிறது.தன்னைப் போலவே போர்ப்படையும் இருக்க வேண்டுமென அதிநவீன, உயர்தர ஆயுதங்கள், குதிரைகள் வாங்கி படையாட்களுக்கு வெகுமதிகளை வாரி வழங்கியுள்ளார். இவரது போர் யுக்திகள், வீரர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. கோவில்களுக்கு நிறைய கொடை கொடுத்தார் என்ற குறிப்பும் உள்ளது. ஒரு மாவீரனின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு உதவும் நுால்.–- விஜய்