/ மாணவருக்காக / மாண்புமிகு மாணவனே
மாண்புமிகு மாணவனே
மாணவ சமுதாய முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் பயன்படும் செய்திகளை கவிதையாக்கி விளங்க வைக்கும் நுால். மாணவர் வளர்ச்சி, பயிற்சி, முயற்சிக்கு கல்வி அவசியம் என வழிகாட்டுகிறது. தேச பக்தி, சமத்துவம், சுற்றுப்புற துாய்மை, மரம் வளர்ப்பு, ஆசிரியரை போற்றல், வாசிப்பு பழக்கம் போன்ற நற்பண்புகளை வளர்க்க வலியுறுத்துகிறது. விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. திறமையுடன் பயிற்சி செய்தால் வெற்றி கோப்பையை முத்தமிடலாம் என நம்பிக்கை ஊட்டுகிறது. குறிக்கோள், திட்டமிடல், நெறிப்படுத்துதல், தலைமை பண்பு சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மாணவர்களுக்கு வழிகாட்டும் நுால். – புலவர் சு.மதியழகன்