/ வாழ்க்கை வரலாறு / எம்.ஜி.ஆரின் பயணம்
எம்.ஜி.ஆரின் பயணம்
எம்.ஜி.ஆர்., புகழ் உச்சிக்கு செல்ல அவர் கொடுத்த விலை சாதாரணமல்ல என்று கூறும் ஆசிரியர், அவரது நற்பண்புகளை பின்பற்ற இந்த நுால் மூலம் தெரிவித்த கருத்துக்கள் ஏராளம். தன்னை துாற்றியவர்களுக்கும் பணமும், சமயங்களில் பாசமும் பொழிந்த அவரின் செயல்கள் இதில் அதிகமாக தரப்பட்டிருக்கின்றன.ராமாவரம் தோட்டத்தில் யார் வந்தாலும் சாப்பாடு, பலருக்கு பண உதவி தந்த அவர், ஒவ்வொருநாள் இரவும் படுக்கும் முன்,தனக்கு வந்த கடிதங்கள், அன்றைய வரவு – செலவு கணக்கைப் பார்க்க தவறியதில்லை என்ற பல தகவல்கள் கொண்ட நுால்.